மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் மறியல்:732 பேர் கைது

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெறும் என

News image
Updated On :11 ஆகஸ்ட் 2014, 8:50 am

முத்துகுமார்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் சாலைமறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்கள் 732 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் திருநெல்வேலி சந்திப்பில் திங்கள்கிழமை காலையில் திரண்டனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் சத்துணவு வழங்கும் பணியில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி முழக்கமிட்டனர்.

போராட்டத்திற்கு கூட்டமைப்புத் தலைவர் ஆர்.ராசையா தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.ஏசாயாகுருபாதம், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.ரத்தினம், பி.காசியம்மாள், தாவீதுதர்மராஜ், முருகையா, திரிபுரநாராயணன், சிவஞானம், ஆறுமுகம், இசக்கியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றிய மாநிலச் செயலர் எஸ்.பழனிச்சாமி, வி.பார்த்தசாரதி எம்.எஸ்.மந்திரம், த.பத்மநாபன், க.துரைசிங், ச.ஈனமுத்து, மு.குருசந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

பின்னர் திருநெல்வேலி-மதுரை சாலையில் மறியல் செய்ய முயன்றவர்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கைது செய்தனர். மொத்தம் 732 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.