தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடலூர் அருகே கடல் அரிப்பு: வீடு சேதம், சிமெண்ட் சாலை துண்டிப்பு

கடலூர் துறைமுகம் அருகே கடலோரம் அக்கரைகோரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் உப்பனாறு, கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் தொடர்ந்து கடல்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2014, 1:30 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் முதுநகர் அருகே கடலோரம் உள்ள அக்கரைகோரி கிராமத்தில் கடல்சீற்றத்தினால் வீடு ஒன்று சேதமடைந்தது. சிமெண்ட் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.

கடலூர் துறைமுகம் அருகே கடலோரம் அக்கரைகோரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் உப்பனாறு, கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றல் அதிகரித்து கடல்நீர் உட்புகுந்து மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. அப்போது கிராமத்தில் உள்ள பொது கழிப்பறை, 4 வீடுகள் கடல்சீற்றத்தில் கடல்நீர்உட்புகுந்து மண் அரிப்பினால் இடிந்து விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அக்கிராமத்திற்கு கடந்த மாதம் சென்று பார்வையிட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் கடலோரத்தில் கருகற்கள் போட வேண்டும், பனை மரம் நட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஜூலை மாதம் மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் ஜூலை 12-ம் தேதி கிராமசபையை கூட்டி, மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் ஜூலை 16-ம் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

கிராமமக்கள் போராட்டம் அறிவித்ததை அடுத்து மாவட்ட நிர்வாகம் 150 மீட்டர் தூரத்திற்கு பனை மரங்களை நட்டது. அப்படியிருந்தும் கடல் சீற்றல் அதிகமாகி, கடல்நீர் உட்புகுந்து ஞாயிற்றுக்கிழமை மகேஷ் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. மேலும் சிமெண்ட் சாலை மண் அரிப்பில் இடிந்து துண்டிக்கப்பட்டது. மேலும் இரு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பின்னர் வீடை இழந்த மகேஷ் கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரை செவ்வாய்க்கிழமை சந்தித்து கடலோர பகுதியில் கடல் சீற்றத்தையும், மண் அரிப்பையும் தடுக்க பெரிய கருங்கற்களை போட வேண்டும், வீடு இழந்தவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.