தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திட்டக்குடி மாணவிகள் பாலியல் வழக்கு: அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 16 பேர் மீது குண்டர் சட்டம்

திட்டக்குடி மாணவிகள் பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. இதற்காக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யும் பணியில் கடலூர் மாவட்ட

News image
Updated On :12 ஆகஸ்ட் 2014, 1:32 pm

ஜி.சுந்தரராஜன்

திட்டக்குடி மாணவிகள் பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. இதற்காக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யும் பணியில் கடலூர் மாவட்ட காவல்துறையினர் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 2 மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பலருக்கு விருந்தாக்கப்பட்டதாக வெளியான தகவல் மாவட்டத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா உத்தரவின்பேரில் 4 தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த வழக்கில் வடலூர் சதிஷ்குமார், அவரது மனைவி தமிழ்செல்வி உள்பட 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் திட்டக்குடியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரும், அவரது கார் டிரைவரும் இவ்வழக்கில் போலீஸார் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் அதிமுக பிரமுகர் மாணவிகளை தனது இச்சைக்கு பயன்படுத்தி உள்ளதும், அவரது கார் டிரைவர் மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் மசோதா தாக்கல் செய்தபோது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அறிவித்தார். இதையடுத்து திட்டக்குடி பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைதான 15 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்காக எஸ்பி ராதிகா, டிஎஸ்பி கருணாநிதி ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை நடத்தப்பட்டு வரும் அதிமுக பிரமுகர், அவரது கார் டிரைவரும் குண்டர் சட்டத்தில் விரைவில் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.