மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கே.ஐ.டி.யில் 8-வது அணி பொறியியில் பட்டப் படிப்பு தொடக்க விழா

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் 8-வது அணி பொறியியல் பட்டப் படிப்பு தொடக்க விழா பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.முதல்வர் டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார் வரவேற்று, வாழ்த்துரை வழங்கினார்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2014, 5:36 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் 8-வது அணி பொறியியல் பட்டப் படிப்பு தொடக்க விழா பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.முதல்வர் டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார் வரவேற்று, வாழ்த்துரை வழங்கினார்.

அமெரிக்கா பிட்ஸ்பர்க், கார்னிகே மில்லன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ராஜா சூரியமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, புதிய அணியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:மாணவர்கள் படிக்கும்போது அறிவு, ஒழுக்கம், திறமை ஆகிய மூன்றையும் வளர்க்க அயராது பாடுபடவேண்டும்.

இந்தியாவில் பெண் தொழிலதிபர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்க மாணவிகள் நன்கு பயிற்சி எடுத்து தொழிற்சாலைகள் ஆரம்பித்து தொழில் அதிபராக மாற வேண்டும். ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகளை மாணவிகள் ஏற்படுத்தித் தருபவர்களாக உயர வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் கலசலிங்கம் கல்வி குழுமத்தின் நிர்வாக அதிகாரி கருப்பசாமி, கல்வி நிறுவங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் பி.சிவக்குமார் நன்றி கூறினார்.பின்னர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் டைபாக்கோர் வளாகத்தில் தி ஏஜ் ஆப் பிக் டேட்டா என்ற தலைப்பில் தகவல்கள் சேமிக்கப்படும் புதிய முறைகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதிலும் டாக்டர் ராஜா சூரியமூர்த்தி கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.