புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

போலி சான்றிதழ்: அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கைது

உதவிப் பேராசிரியர் ஒருவரை அண்ணாமலைநகர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறையில் போலி பிளஸ்டூ சான்றிதழ் கொடுத்து உதவிப் பேராசிரியராக சேர்ந்து மோசடி செய்துள்ளதாக சிதம்பரம் அம்மாப்பேட்டை தில்லைக்காளியம்மன்

News image
Updated On :1 டிசம்பர் 2014, 1:41 pm

ஜி.சுந்தரராஜன்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து மோசடி செய்ததாக உதவிப் பேராசிரியர் ஒருவரை அண்ணாமலைநகர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறையில் போலி பிளஸ்டூ சான்றிதழ் கொடுத்து உதவிப் பேராசிரியராக சேர்ந்து மோசடி செய்துள்ளதாக சிதம்பரம் அம்மாப்பேட்டை தில்லைக்காளியம்மன் நகரைச் சேர்ந்த ஆர்.ராஜாமோகன் (36) மீது பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் உதவிப் பேராசிரியர் ஆர்.ராஜாமோகன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.. உதவிப் பேராசிரியர் ஆர்.ராஜாமோகன் சொந்த ஊர் கடலூர் பண்ருட்டி ஆகும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.