நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுச்சேரி கடற்கரையில் 3 பெண்கள் தற்கொலை : தற்கொலைக்கு முயன்ற மேலும் நால்வர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் புதுச்சேரி கடலில் குதித்தனர். இதில் இரண்டு பெண்கள் மற்றும் அவரது தாய் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தந்தை உட்பட 3 பெண்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :18 டிசம்பர் 2014, 5:08 am

சுஜித்குமார்

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் புதுச்சேரி கடலில் குதித்தனர். இதில் இரண்டு பெண்கள் மற்றும் அவரது தாய் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தந்தை உட்பட 3 பெண்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாய் - தந்தை மற்றும் அவர்களது 5 மகள்கள் என 7 பேர் அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். இந்த நிலையில், நேற்று காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதனால் மனமுடைந்த அவர்கள் 7 பேரும் புதுச்சேரி கடலில் குதித்தனர். இதில் தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்து அவர்களது உடல்கள் கரை ஒதுங்கியது. தற்கொலைக்கு முயன்ற தந்தை உட்பட 3 மகள்கள் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.