தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்கு முயற்சி

தருமபுரி அருகே வெள்ளோளை கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வையாபுரி. இவரது மகன் பழனிச்சாமி(36). இவர் திங்கள்கிழமை காலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்

News image
Updated On :22 டிசம்பர் 2014, 10:53 am

ராதாகிருஷ்ணன்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார்.

தருமபுரி அருகே வெள்ளோளை கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வையாபுரி. இவரது மகன் பழனிச்சாமி(36). இவர் திங்கள்கிழமை காலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தார். அப்போது, தங்களது நிலப்பிரச்னை தொடர்பாக பல முறை மனுசெய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனக் கூறி அவர், தான் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெயை திடீரென தனது உடலில் ஊற்றினார். பின்னர், தீப்பற்றவைக்க முயன்றார்.

இதை பார்த்த, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், விரைந்து சென்று அந்த இளைஞரை மீட்டனர். பின்னர், விசாரணைக்காக பழனிச்சாமியை தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.