மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: திருச்சியில் தனியார் பேருந்துகள் இயங்கின

ஊதிய உயர்வு,பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை

Updated On :28 டிசம்பர் 2014, 2:58 pm

ஊதிய உயர்வு,பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 75 சதவீதம் பேருந்துகள் இயங்கவில்லை.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 11-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு 30.8.2013-ல் முடிவடைந்தது. இதையடுத்து 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தமிழக அரசு காலம் தாழ்த்தி வந்தது.

இதையடுத்து 12-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கவேண்டும், பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 29-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அண்ணா தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் அறிவித்திருந்தனர்.

இதைதொடர்ந்து தமிழக அரசு சென்னையில் கடந்த 26, 27-ஆம் தேதி தொழிற்சங்க நிர்வாகிகளிடம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்பாக, ஞாயிற்றுக்கிழமை அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கியது.

திருச்சியில் 75 சதவீதம் பேருந்துகள் இயங்கவில்லை. அண்ணா தொழிற் சங்க ஓட்டுநர்கள் மட்டுமே பேருந்துகளை இயங்கினார்கள். மற்ற தொழிற்சங்க ஓட்டுநர்கள் பணிமனையி்ல் எடுத்துச்சென்ற பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.

தீரன் நகர், மலைக்கோட்டை,கன்டோன்மென்ட்,டி.வி.எஸ். டோல்கேட், துவாக்குடி,லால்குடி உள்ளிட்ட 18 பணிமனைகள் முன்பு தொமுச, சிஐடியு, ஏஐசிடியு, பாரதீய மஸ்தூர் சங்கம், தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் அறிவிக்கப்பட்ட தேதி முன்னதாக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதினால், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். எனினும் மாநகரப் பகுதி பொருத்தவரை தனியார் பேருந்துகள்,ஷேர் ஆட்டோ உள்ளிட்டவைகள் இயங்கியதால் நகர பகுதி மக்களுக்கு பாதிப்பில்லை.

திருச்சி மாநகரப் பகுதியில் 250 பேருந்துகளுக்கு 25 பேருந்துகளும், புறநகரில் 350-க்கு 75 பேருந்துகளும், இதே போல் லால்குடியில் 100 -க்கு 5 பேருந்துகளும், துறையூரில் 100-க்கு 90 பேருந்துகளும், மணப்பாறையில் 100-க்கு 25 பேருந்துகளும், துவரங்குறிச்சியில் 75-க்கு 10 பேருந்துகளும் இயங்கின. இதில் துறையூரில் மட்டும் 90 சதவீதம் பேருந்துகள் இயங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.