அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஸ்ரீவிலி.யில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:17 am

ஜெயகுமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை-மாதாநகரைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி பழனியம்மாள் (42). இவர் சனிக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். மாலை வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைந்து தொங்கிக் கொண்டிருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது அரிசி டப்பாவில் வைத்திருந்த சாவியை எடுத்து, பீரோவைத் திறந்து அதிலிருந்து 3 பவுன் எடையுள்ள செயின், தோடு மற்றும் மோதிரத்தை யாரோ திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பழனியம்மாள் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.