மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவிலி.யில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Updated On :1 பிப்ரவரி 2014, 3:16 am

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை-மாதாநகரைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி பழனியம்மாள் (42). இவர் சனிக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். மாலை வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைந்து தொங்கிக் கொண்டிருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது அரிசி டப்பாவில் வைத்திருந்த சாவியை எடுத்து, பீரோவைத் திறந்து அதிலிருந்து 3 பவுன் எடையுள்ள செயின், தோடு மற்றும் மோதிரத்தை யாரோ திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பழனியம்மாள் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.