டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

திருச்செந்தூரில் மாசித்திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :6 பிப்ரவரி 2014, 5:48 am

கே சுப்பிரமணியன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாசித்திருவிழாவையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 5.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்பு கொடி மரத்திற்கு தீபாராதனை நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கோவிலின் இணை ஆணையர் (பொறுப்பு) அன்பு மணி, தக்கார் கோட்டை மணிகண்டன், இந்து முன்னணி மாநில தலைவர் அரசுராஜா, துணைத் தலைவர் ஜெயகுமார், திருவாவடுதுறை ஆதீன தவத்திரு அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை தக்கார் கருத்தபாண்டிநாடார், கோவில் அலுவலக கண்காணிப்பாளர் ராஜமோகன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.