மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெண்ணை விறகுக் கட்டையால் அடித்த அரசுப் பள்ளி ஆசிரியை கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடத் தகராறில் பக்கத்து வீட்டுப் பெண்ணை விறகுக் கட்டையால் அடித்துக் காயப்படுத்திய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :7 பிப்ரவரி 2014, 2:22 am

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடத் தகராறில் பக்கத்து வீட்டுப் பெண்ணை விறகுக் கட்டையால் அடித்துக் காயப்படுத்திய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. இவரது பக்கத்தில் குடியிருந்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி ஆண்டாள் (44). ஆண்டாள், முத்துலிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வீரலட்சுமி தனது வீட்டின் விறகுக் கட்டைகளை, வீட்டை ஒட்டி அடுக்கி வைத்திருந்துள்ளார். இதில் ஆசிரியை ஆண்டாளுக்கும் வீரலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமுற்ற ஆசிரியை ஆண்டாள் விறகுக் கட்டையால் வீரலட்சுமியை அடித்துள்ளார்.

இதில் காயமுற்ற அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வன்னியம்பட்டி போலீஸில் வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியை ஆண்டாளைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.