தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக ஞாயிற்றுக்கிழமை உதவி காவல் ஆய்வாளர் உள்பட நால்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒகேனக்கல் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ரவுத்ரி வெங்கடேசன். அதே காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் ராமச்சந்திரன். தருமபுரி நகர காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) மூர்த்தி மற்றும் மாரண்டஅள்ளி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி. இவர்கள் நால்வரும் வழக்கு விசாரணையில் ஆள் மாராட்டம் செய்வது, பணம் பெறுவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுவந்தனராம்.இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கார்க்கிடம் புகார்கள் வந்துள்ளது.
இதன் அடிப்படையில் போலீஸார் ரகசிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நால்வரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நால்வரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.