பாதயாத்திரை குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு தங்கி சனிக்கிழமை முதல்வரின் மகம் நட்சத்திரம் வந்ததால் காலை 7 மணிக்கு மலைக்கோயிலுக்கு பால்குடங்களுடன் சென்று மூலவர் தண்டாயுதபாணிக்கு தமிழக முதல்வர் பெயரில் சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள்,அபிஷேகங்கள் நடத்தினர். மேயர் விசாலாட்சிக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன், பெரியநாயகியம்மன் அறக்கட்டளை தலைவர் சுந்தரம், தாராபுரம் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.