மேலும் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் ஆறு, வாய்க்கால்களில் போதிய நீரின்றி காய்ந்து போனதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்த, தற்போது எடுக்கப்படும் வண்டல் மற்றும் உப்பு குடிநீரினால் மர்ம காய்ச்சல் ஏற்படுவதாக ஒரு பகுதியினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழக்கடம்பூரில் மணிமாறன் மகள் கிருத்திகா (2), சுப்பிரமணியன் மகள் மஞ்சுளா (23), கோவிந்தசாமி (75) ஆகியோர் மர்ம காய்ச்சலில் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் நடமாடும் மருத்துவக்குழுக்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு தக்க சிகிச்சை அளிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.