ஆனால் இந்த விதியை மீறி மேலரதவீதி, கீழரதவீதி, வடக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, சத்தியமூர்த்தி தெரு, வ.உ.சி. தெரு, தெற்கு மவுண்ட் சாலை, எஸ்.என். சாலை, சுவாமி சன்னதி தெரு, கல்லத்தி முடுக்குத் தெரு, பாரதியார் தெரு, ஏ.பி. மாடத்தெரு உள்ளிட்ட பகுதியில் 103 கட்டடங்கள் விதிகளை மீறி 9 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான உயரமாக உள்ளன.கோயில் கோபுரத்தையும், கோயிலையும் பாதுகாக்கும் வகையில் விதியை மீறி கட்டப்பட்டு்ள்ள 103 கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும். புதிதாக கட்டப்படும் கட்டடங்களின் பணியை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.