தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

திருநாரையூர் கோயிலில் அப்பர் தொண்டு நிறுவன நூறாவது உழவாரப்பணி

சிதம்பரம் அருகே உள்ள திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் கோயிலில் அப்பர் தொண்டு நிறுவனத்தின் நூறாவது உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :19 பிப்ரவரி 2014, 8:31 am

சிதம்பரம் அருகே உள்ள திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் கோயிலில் அப்பர் தொண்டு நிறுவனத்தின் நூறாவது உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொண்டு நிறுவன நிர்வாகிகள் என்.காளிதாஸ், ஜோதிமகாலிங்கம், சுப்ரமணியன், நளினி, கண்ணன், அமுதா, வெங்கடாஜலம் உள்ளிட்ட 80 சிவனடியார்கள் பங்கேற்று கோயில் வளாகத்தில் உள்ள முட்புதர்கள், செடி, கொடிகளை அகற்றினர். மேலும் கோயில் வளாகம் முழுவதும் நீரினால் கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் சிவபூஜையும், திருமுற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை, சொற்பொழிவு, மாகேஸ்வரபூஜை ஆகியவை நடத்தப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. உழவாரப்பணி ஏற்பாடுகளை அப்பர் தொண்டு நிறுவன செயலாளர் வி.சந்திரசேகரன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.