பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் தலைமையிலான தமிழ்பரப்புரை ஊர்தி பயணத்திற்கு சிதம்பரத்தில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பன்னாட்டு தமிழுறவு மன்றமும், அனைத்து தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் தலைமையில் 22-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை என்ற தமிழ் பரப்புரை ஊர்திப் பயணம் பிப்.12-ம் தேதி கன்னியாக்குமரியில் தொடங்கி தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி வழியாக சென்னையை பிப்.23-ம் தேதி சென்றடைகிறது.
இப்பிரசார ஊர்தி சிதம்பரத்திற்கு வியாழக்கிழமை வருகை தந்தது. வடக்குவீதி தலைமை தபால் நிலையம் அருகே பிரசார ஊர்திக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் முனைவர் செல்ல.பாலு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வ.மு.சேதுராமன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அ.அன்பு, பி.சிவபாலன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பி.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

