தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரத்தில் தமிழ் பரப்புரை ஊர்தி பயணத்திற்கு வரவேற்பு

பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் தலைமையிலான தமிழ்பரப்புரை ஊர்தி பயணத்திற்கு சிதம்பரத்தில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On :21 பிப்ரவரி 2014, 8:01 am

பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் தலைமையிலான தமிழ்பரப்புரை ஊர்தி பயணத்திற்கு சிதம்பரத்தில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பன்னாட்டு தமிழுறவு மன்றமும், அனைத்து தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன் தலைமையில் 22-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை என்ற தமிழ் பரப்புரை ஊர்திப் பயணம் பிப்.12-ம் தேதி கன்னியாக்குமரியில் தொடங்கி தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி வழியாக சென்னையை பிப்.23-ம் தேதி சென்றடைகிறது.

இப்பிரசார ஊர்தி சிதம்பரத்திற்கு வியாழக்கிழமை வருகை தந்தது. வடக்குவீதி தலைமை தபால் நிலையம் அருகே பிரசார ஊர்திக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் முனைவர் செல்ல.பாலு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வ.மு.சேதுராமன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அ.அன்பு, பி.சிவபாலன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பி.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.