தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவான கூட்டணியாக திகழ்கிறது. அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் அணியாக திகழும். தமிழகத்தில் மோடி அலை வீசுவது என்பது மாயையாகும். சமூகநீதி மண் இது. சாதி, மதவெறிக்கு மக்கள் இடம் தரமாட்டார்கள். தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு எதிராக திமுக கூட்டணிக்கு வந்தாலும், அதற்கு திமுக தலைமை முயற்சி எடுத்தால் அதற்கு நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம். தமிழகத்தை பொறுத்தவரை எத்தனை அலை அடித்தாலும், எத்தனை அணி உருவானாலும் திமுக, அதிமுக அணி இடையேதான் போட்டி நிலவும். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சமூகநீதி, சமூகஅமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை நிலை நாட்டுவோம் என்ற அடிப்படை முழக்கத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலை சந்திக்க உள்ளோம்.