அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி முகாம்

    விருதுநகர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையும்-மாவட்ட காவல் துறையும் இணைந்து சூலக்கரை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான மன அழுத்தத்தை

Updated On :2 ஜனவரி 2014, 10:57 am

விருதுநகரில் காவல் துறையில் பணியாற்றுவர்கிறவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையும்-மாவட்ட காவல் துறையும் இணைந்து சூலக்கரை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி முகாமை நடத்தியது. விருதுநகர் அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் மோகன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். அதில், காவலர்கள் மன அழுத்தத்தை எப்படி குறைக்க வேண்டும். அதனால் என்னென்ன உடல் பாதிப்புகள் ஏற்படும். அதற்கு என்னென்ன பாதுகாப்பான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

    அதோடு, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் எவ்வாறு பின்பற்ற வேண்டும். விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு என்னமாதிரியான முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டன. இப்பயிற்சி முகாமில் காவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.