விருத்தாசலம் புற வழிச்சாலையில் இன்று அதிகாலை லாரி, கார் நேருக் நேர் மோதி கார் தீ பிடித்து எரிந்தது.இதில் 5 பேர் உடல் கருகி இறந்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறியதாவது:- கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆயிப்பேட்டை கிராமத்தை சேர்ந்த தனசெழியன், ராஜதுரை, சண்முகவேலு, மாயவேல் சேலம் சென்றுவிட்டு காரில் ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது அதிகாலை 3 மணியளவில் கார் விருத்தாசலம் சேலம் புறவழிச்ச சாலையில் சித்தலூர் என்ற இடத்தில் வந்த போது எதிரே காட்டுமன்னார்கோவில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி மீது மோதியது இதில் லாரியின் டீசல் டேங் தீபிடித்து கார் முற்றிலும் எரிந்து சேதமானது, காரில் பயணம் செய்த பாலகுரு, தனசெழின், ராஜதுரை, சண்முகவேலு, மாயவேலு, ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.
ராஜேந்திரன் பின் சீட்டில் அமர்ந்திருந்ததால் கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்துள்ளார். இவர் என்எல்சி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பலத்த காயமடைந்த ராஜேந்திரன் மருத்துவனையில் சேர்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

