முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

விருதுநகர் மாவட்டத்தில் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு  முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஜன-19ம் தேதி நடைபெற இருக்கிறது.

Updated On :12 ஜனவரி 2014, 5:38 pm IST

விருதுநகர் மாவட்டத்தில் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு  முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஜன-19ம் தேதி நடைபெற இருக்கிறது.
    இது தொடர்பாக சுகாதார துணை இயக்குநர் சண்முகசுந்தரம் கூறியாதவது: விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 61,633 குழந்தைகளுக்கும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 1,03,053 குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது. இதில், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 581 மையங்களிலும், விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 487 மையங்களிலும் என மொத்தம் 1068 மையங்களில் வழங்கபட இருக்கிறது. பெரும்பாலும் இம்முகாம்கள் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள் மற்றும் திருக்கோயில் தலங்களில் காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருக்கிறது.
   அதேபோல், இம்மாவட்டத்தில் 33 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்கள் ஆகிய இடங்களில் 46 சிறப்பு குழுக்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துணை இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.