தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குப்பை கொட்டுவதில் தகராறு: 5 பேர் மீது வழக்கு பதிவு

உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் கிராமத்தில் குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் திருநாவலூர் போலீஸார் 5 பேர் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :16 ஜனவரி 2014, 10:14 am

சீனிவாசன்

உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் கிராமத்தில் குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் திருநாவலூர் போலீஸார் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(23) விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன்(26). இவர்கள் இருவருக்குமிடையே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் பாலமுருகன் உறவினர்கள் அரிகோவிந்தன், அண்ணாமலை, அய்யனார், ஆறுமுகம் ஆகிய 5 பேரும் குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து, உதைத்து கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து முருகனின் புகாரின்பேரில் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து பாலமுருகன் உட்பட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.