தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரம் கிராமத்தில் பொங்கல்விழா கொண்டாடிய அமெரிக்கர்கள்

சிதம்பரம் அருகே கிராமத்தில் அமெரிக்கர்கள் 19 பேர் கொண்ட சைவப் பிரியர்கள் குழுவினர் தமிழக கலாச்சாரப்படி பொங்கல் விழாவை கொண்டாடினர்.

Updated On :16 ஜனவரி 2014, 5:28 am

சிதம்பரம் அருகே கிராமத்தில் அமெரிக்கர்கள் 19 பேர் கொண்ட சைவப் பிரியர்கள் குழுவினர் தமிழக கலாச்சாரப்படி பொங்கல் விழாவை கொண்டாடினர்.

சிதம்பரம் அருகே உள்ள புத்தூர் நெடுஞ்சேரியில் உள்ள ஸ்ரீலட்சுமிவிலாஸ் ஹெரிட்டேஜ் ஹோட்டலில் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த பூரண சைவப் பிரியகள் கொண்ட 19 பேர் குழுவினர் தங்கி, அங்கு தமிழக கலாச்சாரப்படி வேட்டி, புடவை அணிந்து கொண்டு கிராமப்புற மக்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். சிலம்பம், காவடி, கரகம், கோலாட்டம், கும்மி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசித்தனர்.

மேலும் புத்தூர் நெடுஞ்சேரியிலிருந்து அருகாமையில் உள்ள நெய்வாசல் கிராமத்திற்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அவர்கள் செல்லும் வழியில் வயல்வெளியில் சம்பா நெல் சாகுபடி அறுவடை மற்றும் உளுந்து பயிர் விதைப்பதை பார்வையிட்டு, தமிழக வேளாண் பாசனம் மற்றும் சாகுபடி குறித்து விவசாயிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.