ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை அருகே காவல்நிலையம் முற்றுகை, மறியல்

திருநெல்வேலி அருகே சிவந்திபட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி யாதவர் சமுதாயத்தினர் யாதவ மகாசபை தலைவர் தேவநாதன், கிருஷ்ணன் படங்களுடன் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனராம்.

News image
Updated On :17 ஜனவரி 2014, 10:01 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே யாதவர் சமுதாய பிளக்ஸ் போர்டு தீ வைக்கப்பட்டதை கண்டித்து காவல்நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி அருகே சிவந்திபட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி யாதவர் சமுதாயத்தினர் யாதவ மகாசபை தலைவர் தேவநாதன், கிருஷ்ணன் படங்களுடன் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனராம். வியாழக்கிழமை இரவு இந்த பிளக்ஸ் போர்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காவல் நிலையம் முன்பு பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பிளக்ஸ் போர்டுக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்கள், சிவந்திபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். சிவந்திபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.