ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாவட்டத்தில் 2.70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து

திருநெல்வேலி மாவட்டத்தில் 1750 மையங்களில் நடைபெற்ற முகாமில் 5 வயதுக்குட்பட்ட 2.70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்

News image
Updated On :19 ஜனவரி 2014, 12:03 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் 1750 மையங்களில் நடைபெற்ற முகாமில் 5 வயதுக்குட்பட்ட 2.70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

நிகழ் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கட்டமாக ஜன. 19 ம் தேதியும், 2 ஆவது கட்டமாக பிப். 23 ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து தொடங்கி வைத்தார்.

இதில் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அ. விஜயகுமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜசேகர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணியன், மருத்துவமனை உறைவிட மருத்துவர் நடராஜன், குழந்தைகள் நலத்துறை தலைவர் தேவிகலா, பாளை மண்டலக்குழுத் தலைவர் எம்.சி. ராஜன், மாநகராட்சி மருத்துவ அலுவலர் பாலகணேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாராயண்நாயர், மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இம்மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 145 மையங்களிலும், புறநகர் பகுதியில் 1505 மையங்களிலும் மற்றும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சுகாதாரத்துறை பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்கள், ரோட்டரி சங்கம், அரசு பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் உள்பட 6,920 பேர் முகாமில் பணியாற்றினர்.

மேயர் தொடங்கினர்: பாளையங்கோட்டையில் மாநகராட்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் மேயர் விஜிலாசத்யானந்த் போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு மருத்துவமனையில் துணை மேயர் பூ. ஜெகநாதன் தொடங்கி வைத்தார். சிந்துபூந்துறை யூனிட் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் பரணி ஏ. சங்கரலிங்கம் தொடங்கி வைத்தார். முகாமில் மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.