தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்குள் காரில் வந்த ஜயேந்திரர்!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தந்த ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கிழக்கு கோபுர வாயில் முன்பு உள்ள மொட்டை மண்டபம், நடண பந்தல் வழியாக 21 படி அருகே வரை காரில் வந்து இறங்கி கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார்.

News image
Updated On :24 ஜனவரி 2014, 7:34 am

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தந்த ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கிழக்கு கோபுர வாயில் முன்பு உள்ள மொட்டை மண்டபம், நடண பந்தல் வழியாக 21 படி அருகே வரை காரில் வந்து இறங்கி கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் மேற்கு வாயில் வழியாக வெளியே வந்த அவர் வெளிப் பிராகாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரில் ஏறி கோயில் வளாகத்தில் தனிசன்னதியாக அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கிழக்கு கோபுர மொட்டை மண்டபம் வழியாக வெளியேறினார்.

நடராஜர் கோயில் வரலாற்றில் முதன் முறையாக கோயில் உள்பிரகாரத்தில் காரில் உள்ளே வந்து ஒருவர் தரிசனம் செய்தது இதுவே முதல்முறையாகும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.