இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 71 மீனவர்கள் பின்னர் அந்நாட்டு நீதிமன்ற உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 18 பேர் இன்று காலை காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். உடன் 5 விசைப் படகுகளும் விடுவிக்கப்பட்டு காரைக்கால் துறை முகம் வந்து சேர்ந்தன. மீதமுள்ள 53 பேர் இன்று பகல் 12 மணி அளவில் கப்பலில் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்கால் துறைமுகத்துக்கு வந்த அவர்களை காரைக்கால் கமாண்டண்ட் உதல் சிங்,