லாரி மீது வேன் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாவு
மதுரை அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.


மதுரை அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.
சென்னை திருவல்லிகேனியை சேர்ந்தவர் ஜமால் மைதீன் (வயது60).இவரது மனைவி லைலா (55). இவர்களது மகன்கள் சையது சுலைமான் (35), அப்துல் ரசாக் (27). அப்துல் ரசாக்கின் மனைவி ஹாமிலா பேகம் (25). லைலாவின் உறவினர் திருமணம் மதுரையில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஜமால் மைதீன், அவரது மனைவி லைலா, மகன்கள் சையது சுலைமான், அப்துல் ரசாக் மற்றும் உறவினர்கள் 14 பேர் ஒரு வேனில் நேற்று இரவு மதுரை புறப்பட்டனர்.
இந்த வேன் மதுரை மாவட்டம் மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் மனப்பட்டி என்ற இடத்தில் வேன் வந்த போது திடீரென்று சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜமால் மைதீன், லைலா, சையது சுலைமான் ஆகியோர் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். தலையில் பலத்த காயமடைந்த அப்துல் ரசாக் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் இறந்து விட்டார்.
இந்த விபத்தில் ஹாமிலா பேகம், தைபிக் (5), தாரிக் (3), அசன் பாத்திமா (50), அப்துல் ரகுமான் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அசன் பாத்திமா இறந்தார். இவ்விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...