தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கண்தானம் வழங்கிய குடும்பத்தாருக்கு பாராட்டு சான்றிதழ்: கடலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 65-வது குடியரசு தின விழாவில் கண்தானம் வழங்கியவர்களின் குடும்பத்தாருக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News image
Updated On :27 ஜனவரி 2014, 7:37 am

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 65-வது குடியரசு தின விழாவில் கண்தானம் வழங்கியவர்களின் குடும்பத்தாருக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக்கழக தலைவர் ஆர்.ராமச்சந்திரன் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கண்தானம், ரத்ததானம் ஆகியவற்றை பெறும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து அவரது பரிந்துரையின் பேரில் 40 நாட்கள் ஆண் குழந்தையின் கண்களை தானமாக வழங்கிய சிதம்பரத்தைச் சேர்ந்த பெற்றோர் ஈகன்-தில்லைக்கரசி, 38 வயது இளைஞர் கலைவாணன் கண்களை தானமாக வழங்கிய அவரது அண்ணன் பிரபாகரன், 92வது தாயார் சரஸ்வதி அம்மாளின் கண்களை தானமாக வழங்கிய அவரது மகன் சந்தானம் ஆகியோருக்கு குடியரசுதின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் பாராட்டு சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.