அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தீண்டாமை உறுதிமொழி ஏற்ற ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்கள்

 காந்திஜியின் நினைவு நாளையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் வியாழக்கிழமை தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.காந்திஜியின் நினைவு நாளையொட்டி,

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:16 am

ஜெயகுமார்

 காந்திஜியின் நினைவு நாளையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் வியாழக்கிழமை தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.காந்திஜியின் நினைவு நாளையொட்டி, பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் அ.சீத்தாலட்சுமி தலைமையில் மாணவர்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக காந்திஜியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் 6-ம் வகுப்பு மாணவி வீரலட்சுமி தீண்டாமை உறுதிமொழியை வாசிக்க, மெழுகுவர்த்தி ஏந்தி ஏனைய மாணவர்கள் தீண்டாமை உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் தலைவர் அ.சீத்தாலட்சுமி பேசுகையில், இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்கள் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மறைந்த நாளை தியாகிகள் தினமாக கடைபிடிக்கிறோம்.

 சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினரான மாணவர்களுக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம். காந்திஜியின் தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில், இன்று இந்தியா முழுவதும் காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

நாட்டுக்கு உழைத்த தியாகிகளையும், அவர்கள் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை நினைவு கூர்ந்து தியாகிகளின் கனவுகள் நனவாகிட நாம் உழைக்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.