ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவஞானவேல் மற்றும் போலீஸார் அளித்த அறிவுரையின் பேரில், சாகுல்ஹமீது ரசாயனப் பொடி தூவிய ரூ. 13 ஆயிரம் பணத்துடன் சனிக்கிழமை சிக்கல் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று, மின்வாரிய வணிக ஆய்வர் கோவிந்தராஜிடம் லஞ்சப் பணத்தை அளித்தார். கோவிந்தராஜ் அந்த லஞ்சப் பணத்தை வாங்கிய போது, அப்பகுதியில் ஏற்கெனவே மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், சந்திரன், உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார், கோவிந்தராஜை லஞ்சப் பணத்துடன் கைது செய்தனர்.