டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சுவர் இடிந்து 11 பேர் பலி: விஜயகாந்த் கண்டனம்

மௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இந்த சம்பவம் மறைவதற்குள் சோழவரம் பகுதியில் தனியார் சேமிப்புக் கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:49 am

அரவிந்தன்

சோழவரத்தில் சுவர் இடிந்து விழுந்து 11 பேர் இறந்த சம்பவத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இந்த சம்பவம் மறைவதற்குள் சோழவரம் பகுதியில் தனியார் சேமிப்புக் கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.காயம் அடைந்தவர் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.தமிழகம் முழுவதும் பல இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் அரசு எந்திரத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்ச, லாவண்யம்தான் என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர்.தமிழகத்தில் கட்டட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அண்டை மாநில கட்டடத் தொழிலாளர்கள் இதுபோன்ற துயரச் சம்பவங்களில் பலியாவதால் தமிழகத்துக்கு அவப் பெயர்தான் ஏற்படுகிறது.தமிழக அரசின் நிவாரணம் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வாகாது.இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்காத வண்ணம் கட்டடம் கட்டுவதற்கான விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றிட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடந்தால், அதற்கு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளையே பொறுப்பேற்கும் வண்ணம் அரசு விதிமுறைகளை விரைந்து ஏற்படுத்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.