பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி அருகே உள்ள வெட்டுவால்மேடு கிராமத்தை சேர்ந்த பிச்சைமுத்து மகன் இளையராஜா (28). இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மலையாளப்பட்டி ஊராட்சி கவுண்டர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஜவ்வரிசி ஆலையில் வேலைக்கு சேர்ந்தாராம். அங்கு, சம்மந்தப்பட்ட ஆலை உரிமையாளர் குழந்தைவேல், அவரை கொத்தடிமையாக நடத்தினாராம். அளவுக்கு அதிகமான நேரம் பணிபுரிய வேண்டுமென கட்டாயப்படுத்தி வந்ததால், இளையராஜா தனது மனைவி செல்வியுடன் மில்லுக்கு அருகில் தங்கி வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் மில்லில் பணிபுரிய விருப்பமில்லாத இளையராஜா கடந்த 1 வாரத்திற்கு முன், மனைவி செல்வியை அழைத்துக்கொண்டு வெளியூருக்கு தப்பி ஓடிவிட்டாராம்.