6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொத்தடிமை தொழிலாளர் தலைமறைவானதால் சிறைபிடிக்கப்பட்ட அவரது தாய்: ஜவ்வரிசி ஆலை உரிமையாளரிடம் விசாரணை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 3 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை பார்த்த இளைஞர் குடும்பத்துடன் தலைமறைவானதால், அவரது தாயை சிறை பிடித்த ஜவ்வரிசி ஆலை உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட பெண் அரசு மருத்துவ மனையில்

News image
Updated On :16 ஜூலை 2014, 2:53 pm

தர்மராஜ்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே 3 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை பார்த்த இளைஞர் குடும்பத்துடன் தலைமறைவானதால், அவரது தாயை சிறை பிடித்த ஜவ்வரிசி ஆலை உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட பெண் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி அருகே உள்ள வெட்டுவால்மேடு கிராமத்தை சேர்ந்த பிச்சைமுத்து மகன் இளையராஜா (28). இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மலையாளப்பட்டி ஊராட்சி கவுண்டர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஜவ்வரிசி ஆலையில் வேலைக்கு சேர்ந்தாராம். அங்கு, சம்மந்தப்பட்ட ஆலை உரிமையாளர் குழந்தைவேல், அவரை கொத்தடிமையாக நடத்தினாராம். அளவுக்கு அதிகமான நேரம் பணிபுரிய வேண்டுமென கட்டாயப்படுத்தி வந்ததால், இளையராஜா தனது மனைவி செல்வியுடன் மில்லுக்கு அருகில் தங்கி வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் மில்லில் பணிபுரிய விருப்பமில்லாத இளையராஜா கடந்த 1 வாரத்திற்கு முன், மனைவி செல்வியை அழைத்துக்கொண்டு வெளியூருக்கு தப்பி ஓடிவிட்டாராம்.

அதைத்தொடர்ந்து ஜவ்வரிசி ஆலை உரிமையாளர் குழந்தைவேல், இளையராஜாவை அரும்பாவூர், பூலாம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தேடியும் கிடைக்காததால், இளையராஜாவின் தாய் மாரியாயியை (50),செவ்வாய்க்கிழமை (ஜூலை 15)   அழைத்துச்சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவலறிந்த அரும்பாவூர் போலீஸார் தனியார் ஜவ்வரிசி ஆலைக்குச் சென்று மாரியாயியை புதன்கிழமை மீட்டனர். மயங்கிய நிலையில் காணப்பட்ட மாரியாயி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, தனியார் ஜவ்வரிசி ஆலை நிர்வாகிகளிடம் அரும்பாவூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.