பெரம்பலூர் அருகே சிலிண்டர் வெடித்து 18 குடிசை வீடுகள் தீக்கிரை: வருவாய்த் துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில், புதன்கிழமை பிற்பகல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 18 குடிசை வீடுகள் எரிந்து தீக்கிரையானது. மேலும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தது. காலதாமதமாக வந்த வருவாய்த் துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.








