6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திமுக நகர்மன்ற உறுப்பினர் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்

பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் பள்ளிவாசல் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் மயில்சாமி மனைவி தீபா (35). அதிமுகவை சேர்ந்த இவர், பெரம்பலூர் நகராட்சியின் 8-வது வார்டு

News image
Updated On :21 ஜூலை 2014, 1:25 pm

தர்மராஜ்

பெரம்பலூர் நகர்மன்ற திமுக உறுப்பினர் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளியை, பெரம்பலூர் போலீஸார் குற்றவியல் நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர்.

பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் பள்ளிவாசல் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் மயில்சாமி மனைவி தீபா (35). அதிமுகவை சேர்ந்த இவர், பெரம்பலூர் நகராட்சியின் 8-வது வார்டு உறுப்பினராக இருந்தார். பெரம்பலூர் வெங்கடேசபுரம் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் அன்புமுத்து (37). திமுகவை சேர்ந்த இவர், பெரம்பலூர் நகராட்சியின் 11-வது வார்டு உறுப்பினராக இருந்தார்.

இந்நிலையில் தீபாவுக்கும், அன்புமுத்துக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த கணவர் மயில்சாமி, தீபாவை கண்டித்தும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்ததாக தெரிகிறது. இதனிடையே, கடந்த 15ம் தேதி தீபாவின் வீட்டிலிருந்த அன்புமுத்துவை, தீபாவின் கணவர் மயில்சாமி வெட்டி கொலை செய்தார். அன்றைய தினமே தீபாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தீபாவின் தாய் பிரேமா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிந்தார்.

தலைமறைவாக இருந்த மயில்சாமி, கடந்த 18ம் தேதி நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, பெரம்பலூர் போலீஸார் திங்கள்கிழமை மாலை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் மயில்சாமியை ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நடுவர் சுரேஷ், பெரம்பலூர் போலீஸார் 2 நாள் காவலில் மயில்சாமியை விசாரிக்க அனுமதித்ததுடன், ஜூலை 23ம் தேதி மாலை 4.20 மணிக்கு மயில்சாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.