நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதல்வருக்கு ஆதரவாக செயல்படும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் திட்டக்குழுவில் அனுமதி: அன்பழகன் எம்.எல்.ஏ. புகார்

முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவாக செயல்படும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மட்டும் திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்துள்ளனர் என சட்டப்பேரவை அதிமுக தலைவர் ஆ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.அவர்

News image
Updated On :22 ஜூலை 2014, 10:15 am

சுஜித்குமார்

முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவாக செயல்படும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மட்டும் திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்துள்ளனர் என சட்டப்பேரவை அதிமுக தலைவர் ஆ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுவை மாநில திட்டக்குழு கூட்டம் திங்கள்கிழமை ஆளுநர் சிங் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வருக்கு ஆதரவாக செயல்படும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இது விதிமுறைகளுக்கு முரணானது.கடந்த 2013-ம் திட்டக்குழுக் கூட்டத்தின் போது அரசு இதே போல் செயல்பட்டபோது சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் எடுத்துக் கூறினோம்.அப்போது அரசியல் கட்சிகளின் தலைவர்களை மட்டும் திட்டக்குழு கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தோம். இல்லாதபட்சத்தில் குழுவின் உறுப்பினர்களை மட்டும்தான் அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால் இதனை யதேச்சைகார மனப்பான்மையுடன் ரங்கசாமி மீண்டும் 2 எம்.எல்.ஏ.க்களை மட்டும் கூட்டத்திற்கு அனுமதித்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த ஆண்டு திட்டக்குழு ரூ.2 ஆயிரம் கோடியை அனுமதித்தது. இதில் ரூ.1630 கோடி மட்டும்தான் செலவிடப்பட்டது. மீதித் தொகை ரூ.370 கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கு ரூ.2400 கோடி பெற திட்டக்குழுவில் முடிவெடுத்துள்ளனர். துறைமுக அபிவிருத்தி திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அரசு எப்படி செய்யப்போகிறது எனத் தெரியவில்லை. அரசின் செயல்படாத தன்மையால் மாநிலத்தின் வளர்ச்சியே பின்னுக்கு தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.

மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 5 மாதகாலமாக இலவச அரிசி வழங்கப்படவில்லை. இதனை மொத்தமாக வழங்குவோம் என அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. அதிலும் தற்போது 2 மாத அரிசி முதல்வர், அமைச்சர்களின் தொகுதிகளில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. காமராஜர் கல்வீடுகட்டும் திட்டம் முழுமையாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டிற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முதல் தவணை பெற்ற பயனாளிகளுக்கு அரசியல் உள்நோக்கத்தோடு 2, 3வது தவணைகள் இதுவரை வழங்கப்படவில்லை.

இதேபோல தாழ்த்தப்பட்டோருக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அமைச்சர்களும், ஆளும்கட்சியினரும் தங்களுக்கு தேவைப்பட்டவர்களுக்கு மட்டும் நிதியை வழங்கியுள்ளனர். அரசியல் பாகுபாடின்றியும், காலதாதமின்றியும் அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கொண்டாடும் விவகாரத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டித்துள்ளார். அதோடு செம்மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டும் என பிரதமருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். இதில் புதுவை அரசின் நிலை என்ன என முதல்அமைச்சர் ரங்கசாமி விளக்க வேண்டும். செம்மொழி வாரம் கொண்டாட வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்றார் அன்பழகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.