தமிழகத்தில் எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தினை உருவாக்க தேவைப்படும் 150 லிருந்து 200 ஏக்கர் நிலபரப்பு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையும், கடலூர்-சேலம் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடமான வேப்பூரை ஒட்டி பரவி கிடக்கிறது. அண்மையில் வருவாய் வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள வேப்பூர் பகுதிக்கும், கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட சின்னசேலம் குறுக்குச்சாலைக்கும் இடைபட்ட கடலூர்- சேலம் நெடுஞ்சாலை இருமருங்கிலும் 200 ஏக்கர் நிலப்பரப்பு இடம் வனத்துறைக்கு சொந்தமானதாக உள்ளது. மேற்கண்ட இடம் தமிழ்நாட்டின் மையப்பகுதியாக அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையிலான இடமாகும்.