தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் பலத்த இடி, மின்னலுடன் மழை: மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் பலி

சிதம்பரம் பகுதியில் சனிக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில் வல்லம்படுகை பாரதிதாசன் தெருவில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டின் பின்புறம்

News image
Updated On :27 ஜூலை 2014, 12:09 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் வட்டத்தில் சனிக்கிழமை இரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி சிதம்பரம் அருகே 3 பசுபாடுகள் இறந்த போயின.

சிதம்பரம் பகுதியில் சனிக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில் வல்லம்படுகை பாரதிதாசன் தெருவில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையின் மீது இடி, மின்னல் தாக்கியது. இதில் கொட்டகையின் கட்டிப்போடப்பட்டிருந்த 3 பசுமாடுகளும் மின்னல் தாக்கியதில் உடல் கருகி இறந்தன. இறந்து போன மாடுகளின் மதிப்பு ரூ.75 ஆயிரமாகும். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.