ஆகஸ்டு 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் விழாவிற்கு அணி வணிகர் பா.பழநி தலைமை வகிக்கிறார். வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், மூசா, பா.பழநி, சி.ரா.லக்குமிகாந்தனார், பேராசிரியர் ஐ.ஆனந்த நடராஜ தீட்சிதர், உ.ரா.உமாநாத தீட்சிதர், பேராசிரியர் த.அகரமுதல்வன், தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோர் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. நிறைவுவிழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று "தீதும், நன்றும் பிறர் தர வாரா" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை தமிழ்ப் பேரவைத் தலைவர் கவிஞர் ராம.ஆதிமூலம் செய்துள்ளார்.