அப்போது இறந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ 25 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்றும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களுக்கு ரூ 160 தினக்கூலி கொடுத்து, 14 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள் என்றும், கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை, தங்குவதற்கான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், இதுகுறித்து கேட்டால் குண்டர்களால் மிரட்டலுக்கு ஆளாகிறோம் என தொழிலாளர்கள் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் தெரிவித்தனர்.