சிதம்பரம் அருகே கண்ணங்குடி-பரமேஸ்வரநல்லூர் புறவழிச்சாலையில் சேதுநகரில் செந்தில் என்பவரது மளிகை கடை உள்ளது. இந்த மளிகை கடையில் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் அருகே உள்ள அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்நதபாலன் என்பவர் பிஸ்கட் பாக்கெட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார். சிறுது நேரத்தில் வாந்தி, மயக்கமடைந்து அருகிலேயே கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் சாப்பிட்ட பிஸ்கட் காலாவதியானதால், பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டறிந்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எஸ்.பி.ராஜாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.