இதனை அடுத்து சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, டிஎஸ்பி ஆர்.ராஜாராம், தனியார் மின் உற்பத்தி நிறுவன மேலாளர் வரதராஜன், எல் அன்ட் டி (L &T) நிறுவன மேலாளர்கள் தானப்பபிள்ளை, சுரேஷ்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் எம்.ஜி.ரமேஷ்பாபு, கரிக்குப்பம் பகுதி செயலாளர் பரமானந்தம், விவசாய சங்க ஒன்றிய அமைப்பாளர் கருணைச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.