திருப்பூரை சேர்ந்தவர் நித்யானந்தம் (51). இவரது மனைவி எபனேசர் சொர்ண செல்வி (47). தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள உறவினர் வீட்டு வந்த நித்யானந்தமும், அவரது எபனேசரும் கடந்த மே 30 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருப்பூர் சென்றாராம்.சந்திப்பு ரயில் நிலையத்தில் வைத்து எபனேசர்சொர்ண செல்வி, தான்அணிந்திருந்த 5 பவுன் எடையுள்ள தங்கநகையை கழற்றி தனது கைப்பையில் வைத்தாராம். திருப்பூர் சென்று பார்த்தபோது, தங்கநகையை காணவில்லை. தான் வைத்திருந்த கைப்பை கிழிந்து ஓட்டை இருந்ததை அறிந்த எபனேசர் திருப்பூர் ரயில் நிலையத்தில் புகார் செய்தார்.