ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கிறிஸ்துவ பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி உறவினர்கள் மறைமாநில யேசு சபையினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அந்தோணி. இவரது மனைவி மரியதங்கம். இவர்களுக்கு அலெக்சிஸ் பிரேம்குமார் (47), ஆல்பர்ட் மனோகரன் (திருவாடானை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்), ஜோசப் (தனியார் நிறுவனம் ஊழியர்), எலிசபெத் (வேலூரில் கன்னியாஸ்திரி), சகாயசெல்வி (சிவகங்கை பள்ளியில் ஆசிரியர்)என 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
கடத்தப்பட்ட அலெக்ஸிஸ் பிரேம்குமார் வாரியன்வயல் கிராமத்தில் 3.5.1967ஆம் ஆண்டு பிறந்தவர். 8ஆம் வகுப்புவரை புலியால் பள்ளியிலும், 12ஆம் வகுப்பு வரை தேவகோட்டை தே பிரிட்டோ பள்ளியில் பயின்றுள்ளார். பின்னர் மறை கல்வி கற்பதற்காக திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள பெஸ்கி மறையியல் கல்லூரியில் 15 ஆண்டுகள் படித்தார். இதனைத் தொடர்ந்து அகதிகள் மறுவாழ்வு மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்று அகதி குழந்தைகளுக்கான கல்வி் பணியை மேற்கொண்டு வந்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பழங்குடி மக்களின் மறுவாழ்வுக்கான பணியை மேற்கொள்ள சேசு சபையின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவகங்கை மதுரை சாலையில் வசிக்கும் சகோதரி சகாயசெல்வியின் வீட்டு விசேஷத்திற்காக சிவகங்கைக்கு வந்த அவர் மீண்டும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரட் நகரத்திற்குத் திரும்பி உள்ளார். கடைசியாக சகோதரன் மனோகரனுடன் கடந்த ஜூன் 1ஆம் தேதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இந்நிலையில் ஜூன் 2ஆம் தேதி (திங்கள்கிழமை) அவர் கடத்தப்பட்ட விவரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் கடத்தப்பட்ட அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை அந்தோணி, சகோதரர்கள், சகோதரி மற்றம் தேவகோட்டை, மறைமாநில யேசு சபைத் தலைவர் ஆகியோர் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றி ரியான் பராக்கின் நம்பிக்கையை அதிகரிக்கும்: இர்பான் பதான்

43 வயதிலும் நிற்காத வேகம்..! 5 விக்கெட்டுகள் எடுத்த ஆண்டர்சன்!
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!

மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

