6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேட்டையில் குடிநீர்த் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப் பகுதிக்கு பெரும்பாலும் காலையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுமாம். ஆனால், இதனை சிலர்

News image
Updated On :22 ஜூன் 2014, 1:35 pm

முத்துகுமார்

பேட்டையில் நிலவி வரும் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப் பகுதிக்கு பெரும்பாலும் காலையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுமாம். ஆனால், இதனை சிலர் மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் 4-வது தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறதாம். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிலத்தடிநீரைக் கொண்டு சமையல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், குடிநீர் விநியோகத்தை சீராக்கக்கோரி ரகுமான்பேட்டை பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலையில் பேட்டை-சேரன்மகாதேவி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவலறிந்ததும் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் அழகுதுரை, உதவி ஆய்வாளர்கள் சொர்ணராணி, அன்வர்உசேன், ராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.மாநகராட்சி அதிகாரிகள் வந்து உறுதியளித்தால் மட்டுமே கலைந்துசெல்வோம் என பொதுமக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி இளநிலை பொறியாளர் சேகர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரகுமான்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிக்கும் காலையில் 2 மணி நேரம் தடையின்றி குடிநீர் வழங்கவும், விதிகளை மீறி மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். திங்கள்கிழமை முதல் குடிநீர் விநியோகம் சீராக இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் மறியலால் பேட்டை-சேரன்மகாதேவி பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.