இந்த நிலையில், வருகிற ஜூலை 4-ஆம் தேதி இளவரசனின் நினைவு தினத்தைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்க ஒரு சில அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரின.இதனால், தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் இரு தரப்பினரிடையே பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தருமபுரி வருவாய் வட்டத்தில் இருவார காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், சனிக்கிழமை நத்தம்காலனியில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக 6 பேரை கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வன்முறையை தூண்டும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் ஆகிவற்றை பறிமுதல் செய்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.