தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ஒரகடம் அருகே குழந்தைகளுடன் பெண் மாயம்

ஒரகடம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி கவிதா(32). ஒரகடம் பகுதியில் உள்ல தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.  இவர்களுக்கு நிதீஷ்குமார்(9)

Updated On :1 மார்ச் 2014, 12:51 pm

ஒரகடம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு ஆண்குழந்தைளுடன் பெண் மாயமானதால் அவரது உறவினர்கள் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒரகடம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி கவிதா(32). ஒரகடம் பகுதியில் உள்ல தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.  இவர்களுக்கு நிதீஷ்குமார்(9), சாந்தகுமார்(3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விஜயகுமார் தினமும் மது அருந்திவிட்டு  கவிதாவிடம்  அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கவிதா தனகு குழந்தைகள் நிதீஷ்குமார், சாந்தகுமார் ஆகியோர் அழைத்துக்கொண்டு கடந்த 27ம் தேதி முதல் மாயமானார். அவர்களை எங்கு தேடியும் கிடைக்காததால் கவிதாவின் தாயார் வல்லம் கிராமத்தை சேர்ந்த சாந்தி ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் ஒரகடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாயமான கவிதா மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.