இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் குற்றவிசாரணை முறைச்சட்டம் பிரிவு 133 (1)-ன் கீழ் பள்ளி தாளாளருக்கு உத்தரவு பிறப்பித்தார். உத்தரவு விபரம்: சிதம்பரம் வேங்கான்தெரு வார்டு-3, பிளாக்-4, T.S.No.216-nd 0.0617 ச.மீ (6641 ச.அடி) பரப்பளவில் திருப்பாற்கடல் குளம் அமைந்துள்ளது. வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், நகர அளவர் ஆகியோர் மூலம் புலத்தணிக்கை செய்து அறிக்கை பெறப்பட்டது. மேற்படி இடம் 6641 ச.அடி பரப்பளவில் திருப்பாற்கடல் குளம் உள்ளது. இதில் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் 3 ஆயிரம் சதுரஅடி ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் ஷீட் கொட்டகை போட்டு ஆக்கிரமித்துள்ளது. எனவே மேற்படி இடம் நீர்வழி புறம்போக்கு என்பதால், இந்த இடம் பொதுமக்கள் நலன் கருதி பொதுநன்மைக்காக பயன்படுத்தக்கூடியது. மேற்படி ஆக்கிரமிப்பு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே திருப்பாற்கடல் குளம் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள சிமெண்ட் ஷீட் கொட்டகையை பிப்.26-ம் தேதிக்குள் அகற்றிட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.